Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னமனுாரில் பிரம்ம குமாரிகள் ... ஆடி பதினெட்டாம் பெருக்கு; என்ன செய்யலாம்.. மறந்தும் கூட செய்யக்கூடாதது எது? ஆடி பதினெட்டாம் பெருக்கு; என்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் மூன்றாவது வார பெருந் திருவிழா : குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் மூன்றாவது வார பெருந் திருவிழா : குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 ஆக
2025
05:08

சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்றாவது சனி வார திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தேனி மாவட்டம் குச்சனூரில் பிரசித்திபெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனி கோயில் இது மட்டுமேயாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடைபெறும். குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமை பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும். கோயில் திருப்பணி நடைபெறுவதால் கடந்த 2 ஆண்டுகளாக அதிகார பூர்வ திருவிழா நடைபெறவில்லை. இருந்த போதும் நேற்று சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று காலை மூன்றாவது வாரம் என்பதால் அதிகாலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தனர். கோயிலிற்கு முன்பு ஒடும் சுரபி நதியில் குளித்து, காக்கை வாகனம் வாங்கி விடுதல், எள்ளு, உப்பு சாத்துதல் போன்ற நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். தீபங்களை ஏற்றினர். சுவாமிக்கும், அம்மனுக்கும் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆக . 11 ல் கருப்பண சுவாமிக்கு மது பாட்டில் படையல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் 2 கி.மீ. தூரத்திற்கு வரிசையாக நின்றது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேனி, சின்னமனூர், கம்பம், போடி போன்ற, ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: ருத்ரபிரயாக், கேதார்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. நேற்று ஏற்பட்ட நிலச்சரிவால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar