விழுப்புரம் வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2025 12:08
விழுப்புரம்; விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரயில்வே காலனி வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து, நேற்று 3ம் தேதி மதியம் 1:00 மணிக்கு தீமிதி திருவிழா மற்றும் சாகை வார்த்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்தும், கூழ் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது. இதை தொடர்ந்து, வரும் 10ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.