காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஏகாதசி ஸ்தபன திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 11:08
கோவை; ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி முன்னிட்டு கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. முதன்மை அர்ச்சகர் சுரேஷ் நாராயணன் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து விஷ்வக்ஷேனர் பூஜை புண்ணியாவசனம் கலச ஆவாகனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் முடிந்து ரங்கநாதர் நீல நிற பட்டு உடுத்தி வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள தாளம் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வலம் வந்து ஆஸ்தானம் சேர்ந்தார். இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசு தாரர்கள் அறங்காவலர் குழு வினர் திருக்கோவில் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.