Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியப்ப சுவாமி கோவிலில் ஆடி ... வெங்கடேஸ்வர சுவாமி முதலில் காலடி வைத்த நாராயணகிரி பாதத்தில் சத்ரஸ்தாபனோத்ஸவம் வெங்கடேஸ்வர சுவாமி முதலில் காலடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரியில் பாறை ஓவியம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
கிருஷ்ணகிரியில் பாறை ஓவியம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

07 ஆக
2025
12:08

சென்னை; கிருஷ்ணகிரி மாவட்டம் கடமக்குட்டை கிராமப் பகுதியில், பாறை ஓவியம், கல்வட்டம் எனும் ஈமக்காட்டை, சென்னை பல்கலை மாணவர் சுதர்சன் கண்டறிந்துள்ளார்.


கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள காப்புக்காட்டு மலையின் உச்சியில் உள்ள, கடமக்குட்டை கிராமப் பகுதியில், சென்னை பல்கலை, பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் சவுந்தரராஜன் மற்றும் பேராசிரியர் ஜினுகோஷி வழிகாட்டுதலில், மாணவர் சுதர்சன், கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள பாறைகளில் ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தார்.


இது குறித்து அவர் கூறியதாவது: கடமக்குட்டை கிராமம் மலை உச்சியில் உள்ளது. இங்கு பழங்குடியினரான இருளர்கள் வசித்த குகைப்பகுதியில் ஆய்வு செய்தபோது, யானை ஓவியங்கள் இருந்ததை அறிந்தேன். மூன்று இடங்களில், இதுபோன்ற பழங்கால ஓவியங்கள் இருந்ததைக் கண்டறிந்தேன். அவற்றில் நான்கு யானைகள் வரையப்பட்டு உள்ளன. மேலும், ஆய்வு செய்ததில், அருகில், இரும்புகால புதைப்பிடமான கல்வட்டங்கள் மூன்று உள்ளதை கண்டறிந்தேன். , கடமக்குட்டை பகுதி, யானை வழித்தடமாக உள்ளதால், விவசாயத்தை யானைகள் சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக, யானை உருவத்தை தற்போதும் நாமக்கட்டியால் வரைந்து, அறுவடை காலமான சித்திரை மற்றும் தை மாதங்களில் வணங்குவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். அவற்றின் அருகில், 17 மீட்டர்; 18 மீட்டர்; 8 மீட்டர் விட்ட அளவுள்ள, இரும்பு காலத்தை சேர்ந்த, மூன்று கல் வட்டங்கள் உள்ளன . பாறை ஓவியங்கள் உள்ள பகுதிக்கு, சற்று தொலைவில் உள்ள பாறையில், தமிழ் மொழியில், கிரந்த எழுத்துக்களில் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், 13ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்த, ஹொய்சாள மன்னர் வீரராமநாதரின் பெயர், பட்டப் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அருகில், இரு கொம்புகளுடன் உள்ள ஒரு மனித உருவம், குதிரையின் மீது சவாரி செய்யும் மனிதனும், பாறை செதுக்கல்களாக உள்ளன. பொதுவாக, அக்காலத்தில், கொம்புகளை உடைய மனித உருவம், தெய்வமாக வணங்கப்பட்டுள்ளதை, பல இடங்களில் உள்ள ஓவியங்களின் வாயிலாக, அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணருக்கு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சியை ... மேலும்
 
temple news
பெருமாள் பக்தனான மன்னர் பத்மாட்சன் காட்டிற்குச் சென்று தவத்தில் ஈடுபட்டார். காட்சியளித்த பெருமாள் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா ஆக., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar