Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவகிரக கோட்டை சிவன் கோவிலில் இந்தோனேசியா பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
நவகிரக கோட்டை சிவன் கோவிலில் இந்தோனேசியா பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2025
03:08

பல்லடம்; இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்த குழுவினர், பல்லடம் அருகே, சித்தம்பலம் சிவன் கோவிலில் இன்று தரிசனம் செய்தனர்.


திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, சித்தம்பலத்தில், பிரசித்தி பெற்ற நவகிரக கோட்டை சிவன் கோவில் உள்ளது. கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த, 16 பேர் கொண்ட குழுவினர் இன்று வந்திருந்தனர். அமாவாசை தினமான இன்று சிறப்பு வழிபாடுகள், ஹோமங்கள் நடைபெற்று வந்த நிலையில், அனைவரும் அதில் பங்கேற்று வழிபாடு செய்தனர். காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர், அனைவரையும் வரவேற்று உபசரித்தார். தொடர்ந்து, நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானை வழிபட்டு, ஆதீனத்துடன் இணைந்து முழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, கோவிலின் வரலாறு, சிறப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர்.


பஞ்சலிங்கேஸ்வரர் கூறுகையில், ஆன்மிக காரியங்களுக்காக, நான், அடிக்கடி வெளிநாடுகள் செல்வது வழக்கம். அவ்வாறு, இந்தோனேஷியா நாட்டுக்கு சென்றபோது, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்ததுடன், பாரம்பரியம் குறித்து தெரிந்து கொள்ள, தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, தற்போது, இந்தோனேஷியாவில் இருந்து பல்லடம் வந்த, 16 பேர் கொண்ட குழுவினர், கடந்த இரண்டு நாட்களாக பல்லடத்தில் தங்கியுள்ளனர். இன்று நவகிரக கோட்டை சிவன் கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்தனர். மேலும், சில நாட்கள் தமிழகத்தில் தங்கி, பிரசித்தி பெற்ற பல கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவும் திட்டமிட்டுள்ளனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar