புதுச்சேரி: நல்லாத்தூர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. ஏம்பலம் அடுத்த நல்லாத்தூரில், பிரசித்திப் பெற்ற வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 24ம் தேதி காலை 5.30 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு சந்தனம், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது. காலை 7 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீதியுலா நடக்கிறது. பகல் 12 மணிக்கு சன்னதி புறப்பாடும், 12.30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. இரவு 8.30 மணி வரை, சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.