பதிவு செய்த நாள்
22
டிச
2012
11:12
உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் வரும் ஜன.1ம்தேதி 1008 பால்குடம் பவனி நடக்கிறது. ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றம் ஸ்ரீ ராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக பெருமக்கள் இணைந்து 6வது ஆண்டாக குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் வரும் ஜன.1ம்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 1008 பால்குடம் அபிஷேக விழா நடக்கிறது. இதனையொட்டி டிச.31 ம்தேதி முத்தாரம்மன் கோயிலில் மாலை 6மணிக்கு மஹா அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவு 7.20 மணிக்கு சிறப்பு அன்னதானமும், இரவு 8.10 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், இரவு 9 மணிக்கு பக்தி கச்சேரியும், வரும் ஜன.1ம்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கஜபூஜை, கோபூஜை, மஹாலட்சுமி பூஜை, காலை 6.30 மணிக்கு ஏகாதசி ருத்ர சுக்த, துர்கா சுக்த, மஹாஹோம 108 கலச பூஜை, காலை 8.10 மணிக்கு குலசை அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் இருந்து 1008 பால் குடம் புறப்படுதல், காலை 11.45 மணிக்கு திரவியாஹீதி, வஸ்த்ராஹீ தி பூர்ணஹீதி மஹா தீபாராதனை, பகல் 12 மணிக்கு 1008 பால்குடம் அபிஷேகம், 108 கலசாபிஷேகம், மஹா அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், அம்மன் ஊஞ்சல் சேவையும், இரவு 6.30 மணிக்கு புஷ்ப ஸஹஸ்ரநாமாவளி அர்ச்சனை, இரவு 8.10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் தேரில் திருபவனியும் நடக்கிறது. 1008 பால்குடம் பவனி, 1008 திருவிளக்கு பூஜைக்கும் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்களின் வசதிக்காக காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றம், ஸ்ரீராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மீக நண்பர்கள் செய்து வருகின்றனர்.