சின்ன காஞ்சிபுரம் நாகம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2025 10:08
காஞ்சிபுரம்; சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், கோகுலம் தெருவில் உள்ள நாகம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது. சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் கோகுலம் வீதியில் ஆனந்த விநாயகர், நாகம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு விநாயகருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும், மாலை 6:30 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நாகம்மன் வீதியுலா வந்தார். இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது.