Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோசெங்கட் சோழனால் கட்டப்பட்ட ... ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தி பெறுவது ஏன்? ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16 ஆண்டுகளுக்கு பின் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
16 ஆண்டுகளுக்கு பின் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 செப்
2025
12:09

தஞ்சாவூர்; திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, சுவாமிநாதசுவாமி திருக்கோவிலின் இணைக்கோயிலான திருவலஞ்சுழி, பிரஹன்நாயகி உடனுறை அருள்மிகு கபர்தீஸ்வரசுவாமி திருக்கோவில் பூலோகத்தின் புண்ணிய பூமியாக கருதப்படும் பாரத தேசத்தில் விநாயகரின் ஸ்தலங்களாக புராணங்களின் வாயிலாக கூறப்படுவது பத்து ஸ்தலங்களில் ஒன்றாகும். 


மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிராகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலில் அமுதம் கடையும்பொழுது மந்திர மலையின் பாரம் தாங்காது வாசுகி தனது கொடிய விஷத்தை பார்க்கடலில் கக்கியது. அவ்விஷம் கொடிய வெப்பமாகமாறி உலகெங்கும் உள்ள ஜீவராசிகளை துன்புறுத்தியது. மேற்படி துன்பம் தாளாது தேவர்கள், அசுரர்கள் மற்ற ஜீவராசிகள் அனைவரும் ஒன்றுகூடி கயிலைமலையை அடைந்து ஈசனிடம் முறையிட்டு வேண்டினர். பிறகு, சிவனின் அறிவுரையை ஏற்று, கடைந்து நஞ்சு கலந்த அமுதத்திலிருந்து ஆலகால விஷத்தை பிரித்து ஈசனால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த சுத்த அமுதமயமான நுரைகளை ஒன்று திரட்டி, சகல நிஷ்கல சச்சிதானந்த பரம்பொருளான ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான் உருவை வழிபட்ட போது சுத்தமான அமுதம் கிடைத்தது. இத்திருக்கோவிலிலேயே விநாயகப் பெருமானுக்கு முதன் முதலாக திருமணம் செய்துவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் இத்திருக்கோவிலில் நடைபெறும். இத்திருக்கோவிலில், திருப்பணி ரூ.4கோடியே 50இலட்சத்தில் அரசு நிதி மூலம் நடைபெற்ற வந்த நிலையில், இன்று 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக நேற்று  யாகசாலை முதல் காலம் தொடங்கியது. தொடர்ந்து ஆறு காலங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை கடம் புறப்பாடு நடைபெற்று வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  இக்கோவிலில் கடந்த 2008 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் டி.ஆர். வாமிநாதன், துணை ஆணையர் தா.உமாதேவி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar