Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஓணம் கொண்டாட்டம்; ... அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத நல்லிணக்கம்; முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம் ஜமாத்தினர்
எழுத்தின் அளவு:
மத நல்லிணக்கம்; முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம் ஜமாத்தினர்

பதிவு செய்த நாள்

05 செப்
2025
10:09

சாலைக்கிராமம்; சாலைக்கிராமத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செல்வவிநாயகர்,முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான முஸ்லிம் ஜமாத்தினர் மற்றும் நிர்வாகிகள் வருகை தந்தனர்.


சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.இதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, சப்த கன்னிகா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின்னர் நேற்று காலை 10:20 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக சாலைக்கிராமத்தில் உள்ள மஸ்ஜிதே இலாகி பள்ளிவாசலை சேர்ந்தவர்களும், ஜமாத் நிர்வாகிகளும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் கோயிலுக்கு வருகை தந்து கும்பாபிஷேகத்திற்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை கோயில் நிர்வாகிகளிடம் வழங்கிய போது அவர்களுக்கு சந்தனம்,குங்குமம் கொடுத்து வரவேற்றனர். கோயில் முன்பாக அன்னதானமும், இரவு பட்டிமன்றமும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சாலைக்கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar