Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமாட்சி அம்மன் நவராத்திரி ... திருப்பதி தேவஸ்தானம் பெயரில் அனுமதியின்றி வெங்கேடஸ்வர கல்யாணம் நடத்தினால் நடவடிக்கை திருப்பதி தேவஸ்தானம் பெயரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரஜதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
ரஜதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்

பதிவு செய்த நாள்

11 செப்
2025
11:09

வேளாங்கண்ணி; வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, ஹிந்து கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள் யாகசால பூஜைக்கு, பட்டுபுடவை தேங்காய், பூ,பழம் என 16, வகையான மங்கள பொருட்கள் வழங்கினர்.


நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரஜதகிரீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. 20, ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்கும் விதமாகவும், ஹிந்து, முஸ்லிம்கள் மத நல்லிணக்க ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக  ரஜதகிரீஸ்வரர் கோவிலுக்கு வேளாங்கண்ணி முகமதியர் தெருவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று மேளதாளம் முழங்க சீர்வரிசை கொண்டு வந்தனர்.  இதையொட்டி மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்புடவை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கள பொருட்களை  முகமதியர் தெரு ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர்.  அப்போது இஸ்லாமியர்களை இன்முகத்துடன் கோவிலுக்குள் வரவேற்ற ரஜதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், அவர்களுக்கு மாலை மற்றும் சால்வைகளை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பின்னர் யாகசாலை பூஜைக்கு சீர்வரிசையாக கொண்டு வரப்பட்ட நவதானியம் உள்ளிட்ட 16, வகையான, ஹோமத்திற்கு தேவையான மங்கள பொருட்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் சீர் எடுத்து வந்து வழங்கிய சம்பவம் வேளாங்கண்ணி பொது மக்கள் மற்றும் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar