ஆவணி திருவாதிரை; வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த செவிலிமேடு ராமானுஜர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2025 04:09
செவிலிமேடு; ஆவணி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவச அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு ஆவணி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, இன்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, வெள்ளி கவசம் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.