Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி முத்தாலம்மன் கோவிலில் ... நாட்டரசன்கோட்டையில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் நாட்டரசன்கோட்டையில் பிரமோத்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரியில் பழமையான கோயில் நந்தவனம் புனரமைப்பு
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரியில் பழமையான கோயில் நந்தவனம் புனரமைப்பு

பதிவு செய்த நாள்

25 செப்
2025
04:09

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் பழமையான கோயில் நந்தவனம் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது.


இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வளாகத்தில் 800 ஆண்டு பழமையான நந்தவனம் உள்ளது. ஒரு காலத்தில் இந்த நந்தவனத்தில் பூக்கும் மலர்களைக் கொண்டு சாமிக்கு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டி காணப்பட்டது. தற்போது இந்த நந்தவனம் மீட்டெடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. மு.சி.அ.சேவுகப்பெருமாள் ஆண்டார் அறக்கட்டளை சார்பில் நந்தவனம் மராமத்து செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் மகாவில்வம், ருத்ராட்சம், நாகலிங்கம், செங்காலி, வன்னி போன்ற இறைவனுக்கு உகந்த மரங்களும், செண்பகம், பாரிஜாதம், பவளமல்லி, மந்தாரை, மனோரஞ்சிதம் உள்ளிட்ட வாசனை மலர்களும் என 240 கன்றுகள் நடப்பட்டது. இதற்கான விழாவில் திருப்பணிக்குழு தலைவர் ராம.அருணகிரி, பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் மற்றும் கிராமத்தினர் பங்கேற்றனர். முன்னதாக கோயிலில் இருந்து தெய்வீக மூலிகை செடிகள் பூக்கன்றுகளை கிராமத்தினர் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெயந்தன் லட்சுமிபிரியா உள்ளிட்டோர் செய்திருந்தனர். நந்தவனத்தை பராமரித்து பூக்களை கோயிலுக்கு வழங்கும் பொறுப்பை அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,30)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
இன்று துர்காஷ்டமி. எதிரிக்கு கூட, கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா. துர்கையை வழிபட ஏற்ற தினம் ... மேலும்
 
temple news
சேலையூர்; ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்து வரும் ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் வி.என். தோட்டம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தினத்தையொட்டி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் மற்றும் பூமாயி அம்மன் கோயில்களில் நவராத்திரி விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar