நாட்டரசன்கோட்டையில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2025 04:09
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை அலர்மேல் மங்கா சமேத வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு இன்று காலை 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவ மூர்த்தி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு தினமும் காலை காலசந்தி, ேஹாமம், பலி, திருவீதிஉலா நடைபெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு பூதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் சிம்மம், அனுமன், தங்க கருட சேவை, சேஷ, யானை வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
செப்., 30 அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அக்டோபர் 3 ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருள்வார். அன்று காலை 9:10 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து தேர் நிலையை அடையும். அக்., 4 அன்று கண்ணுடைய நாயகி அம்மன் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அக்., 5 அன்று காலை 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.