Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை கோயில்களில் புரட்டாசி ... ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலைத்திருப்பதி பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
மேலைத்திருப்பதி பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

27 செப்
2025
02:09

அன்னூர்; கோவை அருகே மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. மேலைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். இன்று அதிகாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவில் சார்பிலும், தனியார் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு அச்சம்பாளையம் செல்வ விநாயகர் குழுவின் இசைக் கச்சேரி நடந்தது. மதியம் இடிகரை பள்ளி கொண்ட அரங்கநாதர் குழுவின் பஜனை நடந்தது. கோவில் முன்புறம் 500க்கும் மேற்பட்ட தாசர்கள் பெருமாளை சேவித்தபடி சங்கு ஊதி வழிபாடு செய்தனர். பக்தர்கள் பலர் அரிசி, பருப்பை தாசர்களுக்கு படைத்து வணங்கினர். பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பெருமாளை வணங்கினர். திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் புளியம்பட்டியில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 4ம் தேதி காலை 4:00 மணிக்கு மகாபிஷேகமும் இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, எம்.கே.ஜி., லேஅவுட் சித்தி விநாயகர், சக்தி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar