Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முளையூர் முத்தாலம்மன் கோயில் ... திருக்கோவிலுார் ஞானானந்தகிரி தபோவனத்தில் நவசண்டி ஹோமம் திருக்கோவிலுார் ஞானானந்தகிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாண்டிய மன்னனுக்கு பூஜை
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாண்டிய மன்னனுக்கு பூஜை

பதிவு செய்த நாள்

04 அக்
2025
11:10

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பாண்டியர்களை தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு சார்பில், பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது.


சங்க காலம் முதலே தமிழகத்தை ஆண்ட தொன்மையான வம்சத்தினர் பாண்டியர்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், ‘சோழர்களை வீழ்த்தி மதுரையை மீட்ட மன்னர்’ என்ற பெருமை பெற்றவர். இவரது ஆட்சி காலத்தில் (1216 – 1244) பாண்டிய நாடு அரசியல், பொருளாதாரம், கலாசார துறைகளில் சிறந்து விளங்கியது. அதனை நினைவு கூரும் வகையில், 700 ஆண்டுகள் கழித்து பாண்டியர் அரசின் அடையாளங்களான செங்கோல், அரசு சின்னங்கள், சுந்தரபாண்டியன் ஆட்சி கால நாணயங்களை வைத்து, வேதம் ஓதப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின் அவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆய்வாளர் மணிகண்டன் கூறுகையில், ‘‘இந்நிகழ்வு, பாண்டிய வரலாற்றின் மகத்துவத்தையும், தமிழர் மரபின் சிறப்பையும் வெளிப்படுத்தும் வரலாற்று நாள். மதுரை மக்களின் சுதந்திர தினமாக கருதலாம்’’ என்றார். அனைத்து மறவர் நல கூட்டமைப்பு பொதுச் செயலாளர் விஜயகுமார், மாநில பொருளாளர் குமார், இளைஞரணி செயலாளர் மணிகண்டன், விஜயநகர உஜ்ஜீவனா டிரஸ்ட் மாநில செயலாளர் செந்தில்குமார், சிவனடியார் நாகராஜன், ஆய்வுக் குழுவின் பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar