Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயங்களில் இன்று ஆருத்ரா ... சிதம்பரம் ஆருத்ர தரிசன விழா: தேரோட்டம் கோலாகலம்! சிதம்பரம் ஆருத்ர தரிசன விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பஞ்சாமிர்தம் தட்டுபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 டிச
2012
10:12

பழநி:பழநி கோயிலில், பஞ்சாமிர்தம் தயாரிக்க, தேவையான பழங்கள் "ஸ்டாக் இல்லாததால், தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், தனியார் கடைகளில் விலை அதிகரித்துள்ளது. பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். மலைக்கோயில் மூன்று கடைகளிலும், அடிவாரம், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள கடைகளிலும் தேவஸ்தான பஞ்சாமிர்தம் "ஸ்டாக் இல்லை. விலை உயர்வு: இதனால், பக்தர்கள் தனியார் கடைகளில் பஞ்சாமிர்தம் வாங்க குவிகின்றனர். இதை பயன்படுத்தி, சில கடைக்காரர்கள் அரைக்கிலோ 30 ரூபாய்க்கு விற்ற பஞ்சாமிர்தத்தை, தற்போது 40 முதல் 50 ரூபாய் வரை விலை உயர்த்தியுள்ளனர். பக்தர்களும் வேறு வழியின்றி வாங்கிச் செல்கின்றனர். பழநி கோயிலுக்கு, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் தரும், பஞ்சாமிர்தம் தயாரிப்பில், தேவஸ்தான நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். முக்கிய விழாக்காலங்கள், விசேஷ நாட்களில் கூடுதலாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பஞ்சாமிர்த டப்பாக்களை வழங்குவதில், தனியார் நிறுவனம் காலதாமதம் செய்கிறது. வாழைப் பழங்கள் வழங்கும் ஒப்பந்ததாரரிடம் பழம் கிடைக்காததாலும், தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் தட்டுபாடு நீங்கி விடும், என்றார்.

ரூ.1.31 கோடி வசூல்: பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாயை எட்டியது. காணிக்கை விபரம்: ரொக்கம் ஒரு கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்து 775 ரூபாய் . தங்கம் 356 கிராம். வெள்ளி 4 ஆயிரத்து 206 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு கரன்சி 802. தங்கத்தினாலான வேல், மாங்கல்யம், செயின், மோதிரம், வெள்ளியிலான வேல், கொலுசு, ஊஞ்சல், ஆள்ரூபம், பாதம், பித்தளை மணி, வேல் மற்றும் பரிவட்டங்கள்,ஏலக்காய் மாலை, கைகடிகாரங்கள். இந்த வசூல் 15 நாட்களில் கிடைத்ததாகும். உண்டியல் திறப்பின் போது கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar