Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை அய்யப்பன் கோவில் வருவாய் ... மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களைப்பு: குவிந்த பக்தர்கள்! மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லை கூத்தரே நடராஜரே கோஷத்துடன் சிதம்பரம் நடராஜர் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 டிச
2012
10:12

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம், கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய உற்சவமான திருத்தேரோட்டம், நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க நகைகள் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிற்சபையிலிருந்து புறப்பாடு செய்யப்பட்டு சிற்சபை உலா நடந்தது. காலை, 7:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு, 7:30 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து முருகர் தேர் சென்றது. சப்-கலெக்டர் சுப்ரமணியன் உட்பட பலர், காலை, 8:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள், "தில்லை கூத்தரே... நடராஜரே என, கோஷம் எழுப்பி, திருத்தேரை இழுத்துச் சென்றனர். தொடர்ந்து சிவகாம சுந்தரி அம்மன் தேரோட்டம் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் சென்றது. மாலை, தேர் நிலைக்கு வந்ததும், சிவகாம சுந்தரி சமேத நடராஜர், ராஜ சபை ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருளச் செய்யப்பட்டு, இரவு, 8:00 மணிக்கு விசேஷ லட்சார்ச்சனை நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு விசேஷ மகா அபிஷேகம் நடக்கிறது. 10:00 மணிக்கு சிற்சபையில் ரகசிய பூஜை நடத்தப்பட்டு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, தீர்த்தவாரி நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் நடனம் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar