பழநி கோயிலில் பங்குனி உத்திர விழா திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் மார்ச் 26ல் காலை கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா, தங்கமயில், யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு விழா நாட்களில் நடந்தது. திருவிழாவில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மார்ச் 31,ல் திருஆவினன்குடி கோயில் முன்புறம் நடந்தது. இரவு வெள்ளி தேரோட்டம் சன்னதிவீதி, கிரி வீதிகளில் நடந்தது. ஏப்.1ல் மாலை பங்குனி உத்திர தேரோட்டம் கிரி வீதிகளில் நடந்தது. இன்று ஏப்.,4 மதியம் 12:00 மணிக்கு திருஆவினன்குடி கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் கோயில் நடையை அடைத்தனர். அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அதன் பின் கோயில் நடை திறந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள் அழகர்சாமி, வெங்கடேசன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.