பதிவு செய்த நாள்
28
நவ
2025
12:11
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து லட்ச காண்ட பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார்.
இன்று நவம்பர் 28ம் தேதி பிரதமர் மோடி கர்நாடகா, உடுப்பிக்கு வருகை தந்தார். பிரதமரை வழியேங்கும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, காலை 11:30 மணியளவில், பிரதமர் கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்கு வருகை தந்தார். மடத்தின் சார்பாக பிரதமருக்கு பூரணகும்ப மாரியாதை அளிக்கப்பட்டது. ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் சுவாமி தரிசனம் செய்த பிரதமர், மடத்தில் லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், துறவிகள், அறிஞர்கள் மற்றும் குடிமக்கள் உட்பட 100,000 பேர் கூட்டாக சேர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதையை ஒருமனதாக பாரயணம் செய்தனர். இதில் பிரதமர் பங்கேற்று லட்சகண்ட கீதா பாராயணம் செய்தார்.
சுவர்ண தீர்த்த மண்டபம்; தொடர்ந்து பிரதமர் மோடி, கிருஷ்ணர் சன்னதிக்கு முன்னால் உள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வை்ததார். மேலும் கனகதாசர் பகவான் கிருஷ்ணரின் தெய்வீக தரிசனம் பெற்றதாக நம்பப்படும் புனிதமான கனக கிண்டிக்கான கனக கவாசத்தை (தங்க உறை) தரிசித்தார். உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடம், வேதாந்தத்தின் த்வைத தத்துவத்தின் நிறுவனர் ஸ்ரீ மத்வாச்சாரியாரால் 800 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது குறிபிடத்தக்கது.
இது குறித்து பிரதமர் தனது வலைதளத்தில் கூறியதாவது. உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தைப் பார்வையிட்டு, லட்சகண்ட கீதா பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மரியாதைக்குரிய விஷயம். கீதா பாராயணத்திற்காக சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி இது. இந்த மடம் நமது கலாச்சார வாழ்க்கையில் மிகவும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்ரீ மத்வாச்சாரியாரால் ஈர்க்கப்பட்டு, இந்த மடம் சமூக சேவையில் முன்னணியில் உள்ளது. இவ்வாறு குறிபிட்டுள்ளார்.
77 அடி உயர ராமர் சிலை; பின்னர், கோவாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ன் பரதகாளி ஜீவோத்தம மடத்தில் வெண்கலத்தால் ஆன 77 அடி பிரபு ஸ்ரீ ராமரின் சிலையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் திறந்து வைக்க உளளார். தொடர்ந்து பிரதமர் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தையும் வெளியிட்ட உரையாற்ற உள்ளார்.