Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ... வீராகாளியம்மன் கோயில் பூத்திருவிழா; பூத்தட்டு ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் வீராகாளியம்மன் கோயில் பூத்திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு; மலைக்கு கொண்டு செல்லப்பட்டது தீப கொப்பரை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு; மலைக்கு கொண்டு செல்லப்பட்டது தீப கொப்பரை

பதிவு செய்த நாள்

03 டிச
2025
11:12

மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்காக மலைக்கு கொண்டு தாமிர கொப்பரை செல்லப்பட்டது. 


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தார். இதனை முன்னிட்டு தீபக்கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின் இன்று மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.


கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர தீப கொப்பரை வைத்து அதில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, 5 கிலோ சூடம் மூலம் தீபம் ஏற்றப்படும். அந்த தீப தாமிர கொப்பரை 1993 முதல் கடந்த ஆண்டுவரை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு டிச. 3ல் மலை மேல் மஹா தீபம் ஏற்ற புதிய தாமிர கொப்பரை பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காக 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலத்திலும், அடிப்பகுதி ஒன்னேமுத்கால் அடி அகலத்திலும், 70 கிலோ எடையில், 400 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட புதிய தாமிர தீப கொப்பரை திருவண்ணாமலையில் தயாரிக்கப்பட்டது. இந்த தீப கொப்பரை இன்று சிறப்பு பூஜைகளுக்கு பின் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து இன்று மாலையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar