இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நேற்று முன்தினம் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை கோபூஜையும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர்.பக்தர்கள் கொண்டு சென்ற பூக்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முடிவில் அம்மன் தேரில் எழுந்தருளி மந்தையிலிருந்து கோயிலுக்கு வந்தடைந்தார்.இதேபோல் சருகுவலையபட்டியிலும் பூத்தட்டு திருவிழா நடந்தது.