காஞ்சிபுரம்; சீதா ராம பஜனை மண்டலி சார்பில், 33வது ஆண்டு, ராதா கல்யாண மகோத்சவம், வரும் 21ம் தேதி, காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில் நடைபெற உள்ளது. சீதா ராம பஜனை மண்டலி சார்பில், ஆண்டுதோறும் காஞ்சிபுரத்தில், ராதா கல் யாண மகோத்சவம் நடத் தப்பட்டு வருகிறது. அதன்படி 33வது ஆண்டு மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத் தின் மடாதிபதி விஜயேந் திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை யில், காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, உத்சவத் தையொட்டி நாளை மறுதினம், காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனையும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு தாசர் கீர்த்தனையும், மாலை 6:00 மணிக்கு பூஜை, இரவு திவ்யநாமமும், 10:00 மணிக்கு டோலோத்சவமும் நடக்கிறது. வரும் 21 தேதி, காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 9:00 மணிக்கு ராதா கல்யாண மகோத்சவமும், மதியம் 1:00 மணிக்கு ஆஞ்சநேய நடக்கிறது. உத்சவமும் ராதா கல்யாண மகோத் சவ நிகழ்ச்சிகளை, பிரும்ம ஸ்ரீ கடயநல்லுார் ராஜகோ பால் பாகவதர் குழுவினர் நடத்துகின்றனர்.