Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் வரும் 21ம் தேதி ராதா ... கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.10.31 லட்சம் கொண்டத்து காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரமற்ற முறையில் திருப்பணிகள் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு
எழுத்தின் அளவு:
ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரமற்ற முறையில் திருப்பணிகள் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு

பதிவு செய்த நாள்

18 டிச
2025
12:12

கள்ளக்குறிச்சி: ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோவில் திருப்பணிகள் தரமற்ற முறையில் நடப்பதாக கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கிராம மக்கள் அளித்த மனுவில்; ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாதர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் பணிகள் அவசர கதியில் தரமற்ற முறையில் நடந்து வருகிறது. மேலும், கோவில் பிரகாரத்திற்குள் புதிய கட்டுமான பணிகள் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி உட்பிரகாரத்திற்குள் மிகப்பெரிய அளவில் அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் கோவிலுக்குள் நிற்பதற்கும், பிரகாரத்தை சுற்றி வருவதற்கும் இடமில்லாத நிலை உள்ளது. கருவறையின் மேல் கலசத்தில் இருந்து பிரபஞ்ச சக்தி மூலவர் மேல் விழுந்து, பக்தர்களுக்கு பிரதிபலிக்கும் என்பதும் ஆகம விதியாகும். அதை தடுக்கும் வகையில் கருவறையின் மேல் மரப்பலகை அமைத்து மூடப்பட்டுள்ளது. எனவே கோவிலில் நேரடி ஆய்வு மேற்கொண்டு ஆகம விதிகள் மீறாமலும், கோவிலின் பழமை மாறாமலும் திருப்பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar