Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா: ... என்னை காப்பது உமக்கு சுமையா ராமா?; கிருதியில் வியக்க வைத்த அர்ச்சனா என்னை காப்பது உமக்கு சுமையா ராமா?; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 டிச
2025
09:12

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திருஅத்யயன உத்ஸவம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருமங்கை ஆழ்வார் பாடிய  திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது, 


உற்சவத்தின் பூர்வவாங்க நிகழ்ச்சியான இவ்வைபவத்தை ரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில் துவக்கி வைக்க லக்ஷ்மி நாராயணன் அரையர் குடும்பத்தினர் மேள தாளத்துடன் கோயிலுக்குள் அழைத்துவரப்பட்டனர். பகல் பத்து முதல்நாள் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுர் லக்னத்தில் காலை 7.00 மணிக்கு புறப்பாடு நடைபெற்று, பகல்பத்து (அர்ஜுன) மண்டபம் சேர்ந்தார். தொடர்ந்து காலை 9 மணி முதல் 12மணி வரை அரையர் சேவை நடைபெற்றது.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல உற்சவ விழாக்கள் நடந்தாலும், வைகுண்ட ஏகாதசி விழாவே  முதன்மையானதாக கருத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. கோயிலில் சிறப்புக்குரிய பகல் பத்து விழா இன்று (20ம் தேதி) காலை தொடங்கியது. பகல் பத்து உற்சவம் முதல் நாளில் நம்பொருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி ; சிறிய நெற்றி சுட்டி பதக்கம் அதில் சாற்றி, திருமார்பில் - பங்குனி உத்திர பதக்கம், அதன் மேலே அழகிய மணவாள பதக்கம் - ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திர ஹாரம், சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை; அரைச் சலங்கை, 8 வட முத்து மாலை; வைரக்கல் அபய ஹஸ்தம் - அதில் தொங்கல் பதக்கம் அணிந்து  அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றக்கோரி மலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கத்தில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் வேடுபறி உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராபத்து வைபவம் சிறப்பாக ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மொரீஷியஸ் அதிபர் ஸ்ரீ தரம் பீர் கோகுல், தனது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar