Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி கோயிலில் பகல் பத்து ... வீரராகவப்பெருமாள் கோவிலில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி வீரராகவப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் திருக்குளத்தில் கழிவுகளால் கருப்பாக மாறிய தண்ணீர் பக்தர்கள் முகம்சுளிப்பு
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவில் திருக்குளத்தில் கழிவுகளால் கருப்பாக மாறிய தண்ணீர் பக்தர்கள் முகம்சுளிப்பு

பதிவு செய்த நாள்

21 டிச
2025
12:12

திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் சரவணபொய்கை என்கிற குளத்தில் கழிவுதிட்டுக்கள் பரவியுள்ளதால், தண்ணீர் கருப்பாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பக்தர்கள் நீராடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


திரு த்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற மொட்டை அடித்து, குளத்தில் நீராடி விட்டு சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.


சில பக்தர் கள் மலைப்படிகளுக்கு செல்லும் வழியில் உள்ள சரவணபொய்கை குளத்தில் புனித நீராடுவது அல்லது கை, கால் மற்றும் முகம் கழுவிய பின், மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பர்.


இந்நிலையில், குளத்தை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குளத்து நீர் மாசடைந்துள்ளது. தற்போது, குளத்தில் கழிவு திட்டுக்கள் பரவியுள்ளது. மேலும், குளத்தில் இருக்கும் தண்ணீரும் கருப்பாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.


இதனால், குளத்திற்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், கருப்பாக இருக்கும் தண்ணீரை பார்த்து முகம் சுளித்தும், நீராடாமல் மூலவரை தரிசிக்கின்றனர். சில பக்தர்கள் கருப்பாக உள்ள குளத்து நீரில் இறங்கி கை, கால், முகம் கழுவியும், குளித்துவிட்டும் செல்கின்றனர்.


எனவே, ஹிந்து அறநிலையத் துறை ஆணைய ர், சரவண பொய்கை குளத்தை பார்வையிட்டு, நிறம் மாறிய தண்ணீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பக்தர்கள் முகம் சுளிப்பு


திருத்தணி கோவில் அதிகாரி கூறியதாவது:


பக்தர்கள் வேண்டுதல் எனக் கூறி, வெல்லக் கட்டிகளை குளத்தில் வீசுகின்றனர். காவடிகளுடன் வரும் பக்தர்கள், குளத்தில் பூமாலையை வீசிவிட்டு செல்கின்றனர்.


இதனால், தண்ணீர் கருப்பாக மாறியுள்ளது. நாங்களும், ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் குளத்தில் இருக்கும் பூமாலைகள் மற்றும் கழிவுகளை அகற்றி வருகிறோம்.


இனிவரும் காலத்தில், குளம் அமைந்துள்ள பகுதியில் ஊழியர்களை பணியில் அமர்த்தி, வெல்லம் மற்றும் பூமாலைகள் போடுவது தடுக்கப்படும் .


இவ்வாறு அவர் கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar