மருதூர் ஸ்ரீ ராம வரதராகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா; தருமபுரம் ஆதீன தம்பிரான் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2025 11:12
மயிலாடுதுறை ; மருதூர் ஸ்ரீ ராம வரதராகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா- தருமபுரம் ஆதீன தம்பிரான் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மருதூர் கிராமம் உள்ளது. இங்கு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராம வரதராகினி மடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஹனுமத் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, அனுமன் ஜெயந்தி விழா மூல நட்சத்திர தினமான நேற்று நடந்தது இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, ஒட்டக பூஜை, ரிஷப பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளோடு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இசைப்பிரியர் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சுருட்டி தோடி, சண்முகப்பிரியா, நாட்டை உள்ளிட்ட ராகங்கள் கொண்டு இசை ஆலாபனை நடைபெற்றது. ஹோமங்கள் மற்றும் பூஜைகளை தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சாய் விக்னேஷ் குடும்பத்தினர் செய்திருந்தனர். விழாவில் கலந்துகொண்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.