இதையொட்டி விநாயகர் பூஜை, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து குருசாமி சோமசுந்தரம், துணை குருசாமிகள் சின்னன், ஜெகநாதன், உதயகுமார் வைகை (நிலையூர் கால்வாய்) தென்பம்பா நதிக்கு சுவாமியை அழைத்து வந்தனர். சுவாமிக்கு பால், சந்தனம், ஜவ்வாது, இளநீர், நெய் உட்பட பல்வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகத்தை அர்ச்சகர் அருணாச்சலம் செய்தார். பின் கலசாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களின் சரண கோஷத்துடன் ஆராட்டு விழா நடந்தது. நான்குகால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவா தரிசனம், மதியம் மண்டலாபிஷேகம், சரணகோஷ ஆராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.