தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருவுடையாருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
தஞ்சாவூர், பெரியக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மஹா நந்தியம் பெருமானுக்கு, மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று புத்தாண்டின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு மஹா நந்தியம் பெருமானுக்கு, திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர், பழவகைகள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.