பாலக்காடு; கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 27 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை, வெளிநாட்டில் பணியாற்றும் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வழுதக்காடு பகுதியைச் சேர்ந்த ஷோமகிருஷ்ண காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன், நேற்று நடந்த நிகழ்ச்சியில் கிரீடத்தை பெற்று கொண்டார். கோவில் நிர்வாக உறுப்பினர்களான மனோஜ், விஸ்வநாதன், கோவில் நிர்வாகி அருண்குமார், துணை நிர்வாகி பிரமோத், உதவி மேலாளர் லெஜுமோள், கிரீடம் சமர்ப்பித்த ஷோமகிருஷ்ண குடும்பத்தினர் பங்கேற்றனர். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.