Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோயிலில் ... பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ், ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் சீரமைக்கப்பட்ட 1 மாதத்தில் ஆயிரங்கால் மண்பட கூரையில் விரிசல்
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் சீரமைக்கப்பட்ட 1 மாதத்தில் ஆயிரங்கால் மண்பட கூரையில் விரிசல்

பதிவு செய்த நாள்

13 ஜன
2026
05:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 1.33 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தின் கூரை, 1 மாதத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாயில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறுவதால், இக்கோவிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கும்பாபிஷேகம் நடந்து முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், திருக்கோவில் நிதி, ஆணையர் பொது நல நிதி என, மொத்தம் 1.33 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்த ஆயிரங்கால்மண்டபத்தின் கூரையின் மேற்கு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், விரிசல் ஏற்பட்டுள்ள பகுதி வழியாக உள்ளே செல்லும் மழைநீரால் மண்டபத்தின் கூரை மேலும் சேதமடையும் சூழல் உள்ளதோடு, மண்டபத்தின் உட்பகுதி மழைக்கு ஒழுகும் நிலை உள்ளது. தரமற்ற முறையில் ஆயிரங்கால் மண்டபத்தின் கூரை சீரமைப்பு பணி நடந்ததால், ஒரே மாதத்தில் கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்துள்ள திருப்பணியின் முழு தரத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமரதுரை கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நேற்றும் சென்று வந்தேன். ஆனால், ஆயிரங்கால் மண்டபத்தின் கூரையில் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இருப்பினும் துறை சார்ந்த பொறியாளர் மூலம் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar