Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 மார்
2026
01:03

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்.,17ம் தேதி காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் நடத்தப்பட உள்ளது.



கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்.,8 ம் தேதி நடந்தது. அடுத்த 12 ஆண்டுகளில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மண்டபம் சீரமைப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.



தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.35.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. இம்மாதம் இறுதிக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது.



இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக சென்னையில் நேற்று அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், துறை கமிஷனர் ஸ்ரீதர், கோயில் இணைகமிஷனர் சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஸ்தானிக பட்டர்கள், ராஜா பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



கோயில் திருப்பணிகள், வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடைந்தாலும், சித்திரைத்திருவிழா என அடுத்தடுத்து நடக்கும் கோயில் திருவிழாக்களுக்கு இடையூறு இல்லாமல் வரும் செப்.,17ல் (ஆவணி 31-ம் தேதி) காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு வரும் பக்தர்கள், 16 கால் மண்டபம், சன்னிதி ... மேலும்
 
temple news
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா, பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar