Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறில் முப்பெரும் விழா ... ஆல்கொண்டமால் கோவில் திருவிழா 16ல் சிறப்பு பூஜையுடன் துவக்கம் ஆல்கொண்டமால் கோவில் திருவிழா 16ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரியனார் கோயில் திருமடத்தின் சாவி: திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
சூரியனார் கோயில் திருமடத்தின் சாவி: திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை

பதிவு செய்த நாள்

14 ஜன
2026
07:01

மயிலாடுதுறை: சூரியனார் கோயில் ஆதீன திருமடத்தின் சாவியை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி திருவாவடுதுறை ஆதீனத்திடம் அறநிலையத்துறை ஒப்படைத்தது.


சூரியனார் கோவில் ஆதீனம் 14ம் நூற்றாண்டில் சிவாக்கிர யோகியால் (ஆதி சிவாச்சாரியார்) தொடங்கப்பட்டது. இந்த ஆதீனத்தின் 28 வது குருமகா சந்நிதானமாக இருந்த மகாலிங்க தேசிக பரமாசாரியார் சுவாமிகள் பெங்களூரை சேர்ந்த பெண் பக்தர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட விவகாரத்தால் சலசலப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி அவரை மடத்திலிருந்து வெளியேற கிராம மக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து மகாலிங்க சுவாமி ஆதீனம் நிர்வாக பொறுப்பை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து யாத்திரை செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்றார்.


அறநிலையத்துறை சார்பில் பட்டீஸ்வரம் செயல் அலுவலரை ஆதீனத்தின் நிர்வாக பொறுப்பாளராக நியமித்து ஒரு சிவாச்சாரியார் கொண்டு குரு முதல்வர் சிவாக்கிர யோகிகளுக்கு  தினமும் ஒரு கால பூஜை மட்டும் நடந்தது.  இந்நிலையில் மீண்டும் தன்னிடம் சூரியனார் கோவில் ஆதீனம் நிர்வாக பொறுப்பை ஒப்படைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மகாலிங்க சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு  நடந்து வந்தது. ஆதீன மரபு மீறி மகாலிங்க சுவாமி திருமணம் செய்து கொண்டதால் அவர் தொடர்ந்து ஆதீன குருமகா சந்நிதானமாக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர் என்றும், தொடர்ந்து சூரியனார் கோவில் ஆதீனத்தை திருவாவடுதுறை ஆதீனம் வழி வழியாக நிர்வகித்து வருவது குறித்தும் உரிய ஆதாரங்களுடன் கோர்ட்டில் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்நிலையில் கடந்த 2024 நவம்பர் 12ம் தேதி சூரியனார் கோயில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக மகாலிங்க சுவாமி இருக்க தகுதி இழந்துவிட்டார் என்றும், ஆதீனத்தின் சாவியை அறநிலையத்துறை திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானத்திடம் ஒப்படைக்க  உத்தரவிட்டது.  இந்நிலையில் கோர்ட்  உத்தரவிட்டு 45 நாட்கள் மேலாகிய நிலையில் நேற்று இரவு அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உத்தரவுக்கிணங்க பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி சூரியனார் கோவில் ஆதீனம் மடத்தின் சாவியை திருவாடுதுறை ஆதீனம்  தலைமை மடத்தில் ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கினார். தொடர்ந்து சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஒடுக்கம் ஆன்மார்த்த பூஜை அறை குருமகாசந்நிதானம் அறை என சீல் வைக்கப்பட்ட அனைத்து அறைகளையும் அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்மலாதேவி, ஆய்வாளர் அருணா ஆகியோர் முன்னிலையில் திருவாவடுதுறை ஆதீனம் பொது மேலாளர் மணவழகன் மற்றும் ஆதீன பணியாளர்கள் திறந்து அனைத்து அறைகளில் உள்ள பொருட்களையும் சரிபார்த்து பெற்றுக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar