மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2026 12:01
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து யாக வேள்வியை கண்ணன் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். அதனை தொடர்ந்து நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.