திருப்பூர்: காங்கயம், சிவன்மலை, சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த, 23ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் துவங்கியது.
கடந்த, 26ம் தேதி கொடியேற்றப்பட்டு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதையடுத்து, தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடக்கிறது. காலை, 6:00 ம ணிக்கு சுவாமி ரதத்துக்கு எ ழுந்தருள உள்ளார். மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் துவங்க உள்ளது.
நாளை மாலை, 2ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. 2ம் தேதி மலையை வலம் வந்து நிலை அடைகிறது. 6 ம் தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 7ம் தேதி 9:00 மணிக்கு மஹா தரிசனம் நடக்க உள்ளது. 10ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.