விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2026 01:02
விருதுநகர்: விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருக்கல்யாண திருவிழா ஜன.25ல் இரவு 7:05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் விழா நாட்களில் சுவாமி, வள்ளி, தெய்வானை வீதி உலா நடந்தது. தைப்பூச தினமான நேற்று முன்தினம் பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை 5:05 மணிக்கு விநாயகர், வாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை தேரில் ரத வீதி பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.