அருப்புக்கோட்டை: அருப்புகோட்டை ராமசாமிபுரம் அருகில் உள்ள கொண்டலம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, துர்கா ஹோமம், பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடந்தது. கொண்டலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
காலையிலிருந்து மாலை வரை தேவாரம் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.