கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்பமரத்திலிருந்து நேற்றுமுன்தினம் இரவு 12:00 மணி முதல் பால் வடிந்து கொண்டே இருந்தது. இந்த தகவல் நேற்று காலை அப்பகுதியிலுள்ள மக் களுக்கு பரவியதால் ஏராளமானோர் அதை பார்ப்பதற்காக திரண்டனர். தொடர்ந்து சிலர், வேப்பமரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து சூடம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வேப்ப மரத்தைச் சுற்றி வந்து வழிட்டனர்.