பழனிக்கு பாதயாத்திரையாக சென்று பாதயாத்திரையாக திரும்பிய நகரத்தார் காவடிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2026 04:02
காரைக்குடி; காரைக்குடி பகுதி நகரத்தார்கள், தைப்பூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக சென்று நேற்று காரைக்குடிக்கு பாதயாத்திரையாக திரும்பினர்.
பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு, ஆண்டுதோறும் நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா பிப்.1ம். தேதி நடந்தது. இதனையொட்டி, காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த , 300க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர். பிப். 3ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பிப்.7ம் தேதி காவடி விடைபெற்று ஊர் திரும்புதல் நிகழ்ச்சி தொடங்கியது. காவடி ஏந்தி பாதயாத்திரையாக நகரத்தார்கள் திரும்பும்போது வழிநடிகளும் பக்தர்கள் ஆசி பெற்றனர். நேற்று காரைக்குடி நகருக்கு காவடிகள் வந்தடைந்தன.