Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷீரடி சாய்பாபா கோயிலில் நாளை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
11:01

தூத்துக்குடி: தூத்துக்குடி பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா துவக்கியது. முதல் நாளான நேற்று ஆஞ்சநேயர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வடமாலையுடன் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர்.தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் பிரகாரத்தில் வீற்றிருக்கும் பால ஆஞ்சேயநர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்திவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நான்கு நாட்கள் அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை துவங்கியது.காலையில் ராமயக்யம், அனுமன் மூலமந்திர ஹோமம், அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பின்னர் எஸ்.வி.எஸ்.கே பஜனை நடந்தது.இதனை தொடர்ந்து ஆஞ்சயேநருக்கு மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், நெல்லிப்பொடி ஆகிய பத்து வகையான பொருட்களால் தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் பால ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, வடமாலை சாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பாலாஜி அய்யங்கார் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.மாலையில் ஆஞ்சநேயருக்கு மாக்காப்பு அலங்காரம் மிக நேர்த்தியாக அற்புதமான முறையில் செய்யப்பட்டிருந்தது. மாக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பால ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பின்னர் அதிகமான வடமாலையும் சாத்தப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடந்தது. பூஜைக்கு பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை, எஸ்.வி.எஸ் சபா பஜனை நடந்தது. பின்னர் சிறப்பு தீபாரதனைகள் நடந்தது.விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பாலாஜி மற்றும் முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனுமன் ஜெயந்தி துவக்க நாளான நேற்று பால ஆஞ்சநேயரை தரிசிக்க பெருமாள் கோயிலில் கூட்டம் அலைமோதியது. இன்று இரண்டாம் நாள் ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், நாளை வெண்ணைக்காப்பு அலங்காரத்திலும், வரு 11ம் தேதி அனுமன் ஜெயந்தி அன்று புஷ்பாஞ்சலியும் விமரிசையாக நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar