ஐயப்பன் மணிமண்டபத்தில் படி பூஜை: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2025 01:12
சின்னமனூர்: சின்னமனூர் ஐயப்பன் மணி மண்டபத்தில் 18 படி பூஜை மற்றும் மண்டல பூஜை நடைபெற்றது.
சின்னமனூர் ஐயப்ப பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஐயப்பன் மணிமண்டபத்தில் உள்ள 18 படிகளுக்கு படி பூஜை நடத்தப்பட்டது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 18 படிகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது. ஒவ்வொரு படியிலும் புனித நீர் கும்பங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தது.
ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. படி பூஜைகள் நிறைவு பெற்ற பின் பிரசாதம் வழங்கப்பட்டது. பங்கேற்ற பெண் பக்தர்களுக்கு ஜாக்கெட் துணி, குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
நேற்று காலை மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
மாலை சுவாமி ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. திரளாக பொதுமங்கள் திரண்டு நின்று சரண கோஷமிட்டனர்.
ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஐயப்பா சேவா சங்க தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திரராசன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.