படுநெல்லி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2026 10:02
காஞ்சிபுரம்: சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், வடிவுடையம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு முதல் கால பூஜை மற்றும் 10:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும். அதிகாலை, 1:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும், 4:30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தன. இதில், கம்மவார்பாளையம், அருந்ததியர்பாளையம், மணியாட்சி, மூலப்பட்டு, படுநெல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிவனை வழிபட்டு சென்றனர்.