சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா; ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2026 10:02
சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்து வரும் 45ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின், 4ம் நாளான நேற்று நடன கலைஞர்கள் பங்கேற்று நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 45ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த 13ம் தேதி துவங்கி இன்று 17ம் தேதி வரை நடக்கிறது. 4ம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய நாட்டியம் இரவு 11 மணி வரை நடந்தது. கும்பகோணம் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவிகளின் பரதம், சேஷா நாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதம், சிதம்பரம் கலைவாணி இசை நாட்டியாலயா மாணவிகளின் வள்ளித் திருமணம் பரதம், சென்னை நிருத்யா நடன பள்ளி சாமுண்டீஸ்வரி பரதம், சென்னை முத்ராலயா பரதம், மும்பை கிரித்யா நரசிங் ராணாவின் ஒடிஸி நடனம், பெங்களூரு நிருத்யங்கங்கா ப்ரதர்ஷகா கலை மையம் மாணவிகள் பரதம், மலேசியா நிருத்ய கலாஞ்சலி நடன மையம் மாணவிகள் பரதம், மலேசியா நர்த்தனா கவின்கலை பரதம் நடந்தது.