மகா ஜெயவீர சரபேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2026 10:02
வானுார்: வானுார் அடுத்த காசிப்பாளையம் ஓம் ஸ்ரீ மகா ஜெயவீர சரபேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
விழாவையொட்டி, பக்தர்கள் சுவாமிக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை நடந் தது. சுவாமிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம், இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையில் மலர் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையில் மூல மந்திர யாகம் செய்து, வில்வ அர்ச்சனை, பன்னீர் அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணி க்கு நான்காம் கால பூஜையில் அபிஷேக ஆராதனை நடந்தது. வரும் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ., கூட்டணி வெற்றி பெறுவதற்காக பா.ஜ., முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் திருச்செல்வக்குமார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்க ள் சுவாமி தரிசனம் செய்தனர்.