நீல மாரியம்மன் கோவில் கரக உற்சவத்தில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2026 11:03
குன்னுார்: குன்னுார் அருகே ஜெகதளா கிராமத்தில் உள்ள நீலமாரியம்மன் கோவிலில் கரக உற்சவம் கோலாகலமாக நடந்தது.
குன்னுார் அருகே ஜெகதளா கிராமத்தில் உள்ள நீல மாரியம்மன் கோவிலில் கரக உற்சவம் நடந்தது. விழாவில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நாக அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக விரதம் இருந்த மூன்று பேர் அம்மனின் அலங்கார கரகத்தை சுமந்து, 450 வீடுகளுக்கு ஊர்வலமாக சுமந்து சென்றனர். ஒவ்வொரு வீட்டின் முன்பும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டன. கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேடி வந்த அம்மனை வரவேற்று வழிபாடு செய்து அருள் பெற்றனர். தொடர்ந்து, அம்மன் கரகம் ஆற்றில் அழைத்து செல்லும் நிகழ்வு நடந்தது. அங்கு கரகத்துடன் மூவரும் ஆற்றில் இறங்கி கரைத்தனர். தொடர்ந்து அம்மன் அழைத்து வரும் உற்சவம் நடந்தது. விழாவில் ,பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை மடாதிபதி சகுணா நந்தபுரி சுவாமி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.