சோமனூர் அடுத்த ராமாச்சியம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, திருக்கல்யாண உற்சவ திருவிழா, பிப்., 24 ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 3 ம்ததேதி இரவு கம்பம் நடப்பட்டது. தினமும் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். 4 ம்தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பக்தர்கள் பூவோடு எடுத்தலும் நடந்தது. 9 ம்தேதி விநாயகர் மற்றும் கருப்பராயனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இன்று அதிகாலை, அம்மை அழைத்தலும், மாவிளக்கு எடுத்தலும் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மடிப்பிச்சை எடுத்தும், அங்க பிரதட்சிணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 200 அதிகமான கிடாய்கள் வெட்டப்பட்டன.மலேசிய நாட்டில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசித்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.