அமாவாசையொட்டி, விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று காலை சித்தி விநாயகர், அங்காளம்மன், புற்று மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் மோகினி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, கோவிலை சுற்றி உலா வந்தார். அப்போது, திருமணத்தடை, குழந்தை வரம் வேண்டிய பக்தர்களுக்கு எலுமிச்சை பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, பம்பை உடுக்கையுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.