Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ கொங்கு வடுகநாத சுவாமி ... மஹா பெரியவர் வாழ்க்கை நமக்கு ஒரு ‘லைப் ப்ளூபிரின்ட்’ மஹா பெரியவர் வாழ்க்கை நமக்கு ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஷ்ணு அவதாரங்கள் கணக்கிட முடியாதவை
எழுத்தின் அளவு:
விஷ்ணு அவதாரங்கள் கணக்கிட முடியாதவை

பதிவு செய்த நாள்

23 மார்
2026
01:03

பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் தெரிவிக்கப்பட்டது.


பல்லடம் அருகே, மகாலட்சுமி நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மையத்தில், ஸ்ரீராம நவமி மகோத்சவ விழா நேற்று நடந்தது.


மேற்கு தமிழ்நாடு உதவி மண்டல செயலாளர் சங்கர்ஷண கவுர தாஸ் பிரபு, ராம‌ நவமியின் சிறப்புகள் குறித்து பேசியதாவது:


ஆண்டுதோறும் நாம் ராமநவமி கொண்டாடி வருகிறோம். தினசரியும் ராம நவமி தான். காரணம், கோடிக்கணக்கான பிரபஞ்சங்களிலும், ஒரே நேரத்தில் அவதாரம் எடுக்கக்கூடிய ‌ சக்தி இறைவனுக்கு உண்டு.


பெருமாள் கோவில்களில் உள்ள பத்து அவதாரங்கள்தான் உள்ளன என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதது என்கிறார் பிரம்மதேவர்.


கடலில் எப்படி அலைகளை எண்ண முடியாததோ அதுபோல் பகவானின் அவதாரங்களையும் எண்ண முடியாது என்று பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு யுகம்தோறும் பகவான் அவதாரம் எடுக்கிறார்.


பிரபஞ்சத்தை படைக்கும் பிரம்மாவாகவும், காக்கும் விஷ்ணுவாகவும், அழிக்கும் சிவபெருமானாகவும் கிருஷ்ணரே அவதரிக்கிறார். இதை பகவத்கீதையில் அவரே கூறியுள்ளார்.


அனைத்து அவதாரங்களுக்கும் மூலமாக கிருஷ்ணர் உள்ளார். பகவானைப் பற்றி கேட்பதற்கும், நினைப்பதற்கும், பேசுவதற்குமான வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறார். இதற்காகவே அவர் அவதாரமும் எடுக்கிறார்.


இவ்வாறு அவர் பேசினார்.


முன்னதாக, காலை, 11:00 மணிக்கு ஹரி ராம சங்கீர்த்தனம் நடந்தது. ராமநவமி சிறப்பு உபன்யாசமும், மகாதீபாராதனையும் நடந்தது.


சிறப்பு அலங்காரத்தில், பகவான் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar