விழுப்புரம் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2026 10:03
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரில் முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, கடந்த 10ம் தேதி தேரடி விநாயகர் வழிபாடு, பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 10:30 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு அபிேஷக, தீபாராதனையும், அதிகார நந்தி, பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, வரும் 30ம் தேதி திருக்கல்யாணம், 31ம் தேதி காலை 8:00 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.