Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் தொடரும் இழுபறி பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை 2,000 லிட்டர் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
 பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை 2,000 லிட்டர் பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 மார்
2026
10:03

சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 லிட்டர் பாலாபிஷேகம் நடக்க உள்ளது.


விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மத்திய திருப்பதி என அழைக்கப்படும், பஞ்சவடீ திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு, வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி ஸ்ரீவேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், நாளை ராமநவமி உத்சவத்தையொட்டி, பஞ்சவடீ திருத்தலத்தில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், நாளை ஒவ்வொரு காலத்திலும், புண்யாஹவாசனம், பஞ்சஸுக்த ஹோமம், மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடக்கும். நாளை காலை, லட்சார்ச்சனை பூர்த்தியாகும். ராம நவமியை முன்னிட்டு, நாளை அதிகாலை 4:00 மணிக்கு, ராமர் சன்னிதியில், விஸ்வ ரூப தரிசனம், கோ பூஜை நடக்கும். அதன்பின், காலை 5:30 மணிக்கு, விசேஷ திருமஞ்சனம் நடக்கும். காலை 6:00 மணிக்கு மேல், யாக சாலையில் ஏழாம் கால பூஜை நடக்கும். காலை 8:30 மணிக்கு, சீதா சமேத ஸ்ரீராமச்சந்த்ர மூர்த்தி மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு, 2,000 லிட்டர் பாலாபிஷேகம், வாசனை திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடக்கும். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். காலை 10:00 மணிக்கு, தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மேல், ஸ்ரீராமர் சீதா பிராட்டியுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். புதுச்சேரி குமார் குழுவினரின், விசேஷ நாதஸ்வர இசையுடன், சிறப்பு சீதா கல்யாணம் நடக்கும். விழா ஏற்பாடு விபரங்களை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், தலைவர் யுவராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar